பொதுமக்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

பொதுமக்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது - சுமந்திரன்

நீதிமன்றம் நஷ்டஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் 22 மில்லியன் மக்களுக்கும் நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த பணத்தை மீட்க்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வெளியே ராஜபக்ச சகோதரர்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் அனைத்தையும் நாட்டிற்குள் கொண்டுவர முடியும் அந்த பணத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பலாம்.

முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதாரர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களும் பொது நிதியை கொள்ளைடியத்தன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் அவர்கள் நஸ்டஈட்டை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment