பகிடிவதையை அறியப்படுத்த தொலைபேசி இலக்கம் அறிமுகம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 14, 2023

பகிடிவதையை அறியப்படுத்த தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக, பொலிஸ் திணைக்களம் விஷேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும்.

076 5453454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் (Whatapp) மூலம் தகவல்கள் முறைப்பாடுகள் காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment