மட்டக்களப்பு பகுதியிலுள்ள கடற்பரப்பில் சிறிய நில அதிர்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 10, 2023

மட்டக்களப்பு பகுதியிலுள்ள கடற்பரப்பில் சிறிய நில அதிர்வு

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

4.65 ரிச்டர் ஆக பதிவான இந்த நில அதிர்வ காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, நிலச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவொரு தாக்கமோ, சுனாமி அபாயமோ ஏற்படவில்லை என பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த காலங்களில் நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறான சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment