யாழ். போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை, மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையில், தாதி ஒருவரால் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால் சிறுமியின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சிறுமியின் பெற்றோரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லையெனவும், அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவையெனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, துண்டிக்கப்பட்ட கையை பொலிஸாரூடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டு, வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது.
யாழ். விசேட நிருபர்
No comments:
Post a Comment