நீங்கள் யாரென்பது குறித்து எனக்கு கவலையில்லையென கோட்டாவிடம் தெரிவித்த நிசாந்த டி சில்வா : லசந்த விக்ரமதுங்கவின் கொலை விசாரணையின்போது நடந்தது என்ன? - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

நீங்கள் யாரென்பது குறித்து எனக்கு கவலையில்லையென கோட்டாவிடம் தெரிவித்த நிசாந்த டி சில்வா : லசந்த விக்ரமதுங்கவின் கொலை விசாரணையின்போது நடந்தது என்ன?

20 வருடங்களாக நிசாந்த டி சில்வா இலங்கையின் முக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவராக காணப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து 2015 இல் அகற்றப்பட்டதும் புதிய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் பொறுப்பை நிசாந்த டி சில்வாவிடம் ஒப்படைத்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌிக்கொணர்வுகள் இருப்பதாக இதற்கு முன்னர் தகவல் வௌியான நிலையில், அது தொடர்பான Dispatches நிகழ்ச்சி நேற்றிரவு ஔிப்பரப்பானது.

இந்த அறிக்கையில் நிகழ்ச்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் Sunday Leader ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான தகவல்களும் உள்ளடங்கியிருந்தன.

சனல் 4 வெளியிட்டுள்ள வீடியோவில் கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வாவும் கருத்து தெரிவித்துள்ளார். எனினும் அவர் தனது கதையை ஊடகங்களிற்கு தெரிவித்திருப்பது இதுவே முதல் தடவை.

Sunday Leader பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விவகாரமே நிசாந்த டி சில்வா கையாண்ட விடயங்களில் முக்கியமானது.

இந்த விசாரணைகளின்போது அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் மிகவும் மோசமான செயற்பாடுகளிற்காக பெயர் பெற்ற திரிபோலி பிளாட்டுன் (Tripoli Platoon) குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தின.

நான் திரிபோலி குழுவைச் சேர்ந்த ஐந்து நபர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்தேன். அந்த தொலைபேசி இலக்கங்கள் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன என நிசாந்த டி சில்வா தெரிவித்தார்

நான் தொலைபேசி ஆவணங்கள் உட்பட பல விடயங்களை ஆராய்ந்தேன் இடங்களை கண்டுபிடிக்க முயன்றேன் என நிசாந்த டி சில்வா சனல் 4 க்கு தெரிவித்தார்.

அவர் கண்டுபிடித்த ஆதாரங்கள் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட அன்று காலை அவரது வீட்டிலிருந்து திரிபோலி குழுவைச் சேர்ந்தவர்கள் அவர் கொல்லப்படும் இடம் வரை பின் தொடர்ந்ததை உறுதி செய்தன.

பலர் கோட்டாபய ராஜபக்ஷவே லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் இருந்தார் என சந்தேகப்படுகின்றனர்.

தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை ஆராய்ந்தபோது அந்த சந்தேகம் சரியானது என்பதை உறுதி செய்தேன். ஆகவே நான் கோட்டாபய ராஜபக்ஷவை சிஐடிக்கு அழைத்தேன் என அவர் தெரிவித்தார்.

அது ஒரு துணிச்சலான நடவடிக்கை அதிகாரத்தில் இல்லாத போதிலும் கோட்டாபய ராஜபக்ஷ அச்சத்தை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டார். முக்கிய இடங்களில் செல்வாக்கு உள்ள நண்பர்கள் அவருக்கு இருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் நீர் ஏன் என்னை லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் சந்தேகநபர் என குறிப்பிட்டுள்ளீர் எனக் கேட்டார் என நிசாந்த் டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு நான் தேவையற்ற விடயங்களை செய்யவில்லை தேவையான விடயங்களை மாத்திரம் செய்கின்றேன் என தெரிவித்தேன். நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தேன் எனவும் நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

நான் உங்களை சந்தேகநபராக பெயரிட்டுள்ளேன் என தெரிவித்தேன். கோட்டபாய ராஜபக்ஷ என்னைப் பற்றி அதிருப்தியடைந்தவராக காணப்பட்டார் என நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment