சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபா சன்மானம் : உருக்கமான வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 20, 2023

சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபா சன்மானம் : உருக்கமான வேண்டுகோள்

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் பாட்டியான (அம்மாவின் தாய்) குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (19) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் துண்டுப்பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 25.08.2023 அன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த்தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.

இறந்த சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த 05.09.2023 அன்று சிறுமியின் உடல் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும்.

சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்றபோது 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும். இதனை தாழ்மையாக கேட்கின்றேன். எங்களது பிள்ளையின் அங்கம் வேண்டும் எனவும் சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சிறுமியின் சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0766091158 அல்லது 0754986953 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளார்.

இதேவேளை, சிறுமியின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment