நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு சபீனா வித்தியாலயம் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண மட்டம் நோக்கிச் சென்றுள்ளது.
12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பல முன்னனிப் பாடசாலைகளைப் புறம் தள்ளி மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவி பாத்திமா சுல்பா முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்பாடசாலையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக மாகாண விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவி சுல்பாவுக்கு பாடசாலை சமூகம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இம்மாணவியைப் பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எம். இர்சாத், போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று தகுந்த ஆலோசனை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.சி.எம். இப்ஹாம் ஆசிரியை எம்.ஏ.ஆர்.எப். சியானா ஆகியோர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. அஸ்மி உட்பட பாடசாலை சமூகம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment