2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான ஆவணங்களை, ஜுலை மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஆலோசனைக் கோவையையும் மாதிரி விண்ணப்பத்தையும் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.
No comments:
Post a Comment