பஸ்ஸில் துருக்கி நாட்டு யுவதிக்கு பாலியல் தொல்லை : இராணுவ கோப்ரல் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, July 13, 2023

பஸ்ஸில் துருக்கி நாட்டு யுவதிக்கு பாலியல் தொல்லை : இராணுவ கோப்ரல் கைது

தம்புள்ள பிரதேசத்தில் பஸ் ஒன்றில் பயனித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பாக மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ கோப்பரலே இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த மூன்று யுவதிகளும் பாகிஸ்தான் நாட்டு இளைஞர் ஒருவரும் கண்டிலிருந்து தம்புள்ள நோக்கி பஸ்ஸில் பயனிக்கும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரில் அமர்ந்து சென்ற சந்தேக நபர் நித்திரையில் இருந்த யுவதி மீது பாலியல் சேட்டைகளை மேற்கொண்டபோது ஏற்பட்ட தகராரை அடுத்து பஸ்ஸில் இருந்தவர்கள் சந்தேக நபரைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி துருக்கி நாட்டின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்றும், மற்றைய இருவரும் ஆசிரியைகள் எனவும் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அக்குறணை நிருபர்

No comments:

Post a Comment