இலங்கையில் தினமும் டிக்கட் எடுக்காது பயணிக்கும் ஒரு இலட்சம் பேர் : நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா இழப்பாகிறது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 4, 2023

இலங்கையில் தினமும் டிக்கட் எடுக்காது பயணிக்கும் ஒரு இலட்சம் பேர் : நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா இழப்பாகிறது

இலங்கையில் தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை ரயில்வே திணைக்களம் சுமக்க வேண்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக ரயில் பயணச்சீட்டு சோதனை பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அலுவலக ரயில்களில் பெரும்பாலானோர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வதை அவதானித்துள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களைத் தேடி கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

அவ்வாறு சிக்கியவர்களிடம் 3000 ரூபாய் அபராதத்துடன் இரண்டு மடங்கு பயணக் கட்டணத்தை அறவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு சுமார் நான்கு இலட்சம் பேர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவதாகவும், திணைக்களத்திற்கு மாதாந்தம் ஆயிரம் கோடி ரூபா வருமானம் கிடைத்தாலும், மொத்த வருமானமும் எரிபொருள் செலவிற்கு மட்டுமே செலவிட வேண்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ரயில் கட்டணத்தை விட 75 சதவீதத்தால் பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment