சர்ச்சைக்குரிய கருத்த வெளியிட்டதாக கைதான நதாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 5, 2023

சர்ச்சைக்குரிய கருத்த வெளியிட்டதாக கைதான நதாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நதாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இவ்த்தரவை வழங்கியுள்ளார்.

குறித்த மனு விசாரணையை எடுத்துக் கொண்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பிணைக் கோரிக்கையை எதிர்க்கப்போவதில்லை என தெரிவித்ததையடுத்து, அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியொன்றில், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கடந்த மே 27ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரிய குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் எடுக்கப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஜூலை 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, அவரது பிணைக் கோரிக்கை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

சம்பவம் தொடர்பில் அவரது கருத்துகள் அடங்கிய குறித்த வீடியோவை வெளியிட்டதாக கைதான 'SL VLOG' எனும் யூடியூப் சனலின் உரிமையாளரான புருனோ திவாகர கடந்த ஜூன் மாதம் வழக்குத் தவணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகேவினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment