பௌத்த ஆலயங்களிற்கான மின் இணைப்புகள் துண்டிப்பு : ஓமல்பே சோபித தேரர் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

பௌத்த ஆலயங்களிற்கான மின் இணைப்புகள் துண்டிப்பு : ஓமல்பே சோபித தேரர் குற்றச்சாட்டு

மின் கட்டணங்களை செலுத்தாத பௌத்த ஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர், சூரிய சக்தியில் இயங்கும் மின் கலங்களை அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மின் கட்டணங்களை அதிகரித்துள்ளதால் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆலயங்களிற்கான மின் கட்டணங்கள் 555 வீதத்தினால் அதிகரித்தவேளை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆலயங்களிற்கு சூரியசக்தியில் இயங்கும் மின் கலங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அவ்வாறான எதுவும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அம்பாந்தோட்டையில் உள்ள பௌத்த ஆலயம் உட்பட் சில ஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையிலும் உதுவககந்தையிலும் உள்ள இரு பௌத்த ஆலயங்கள் 25,000 மற்றும் 95000 ரூபாய் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டது அவர்கள் தங்களால் முடிந்தளவு கட்டணத்தை செலுத்தினார்கள் கிராம மக்கள் வழங்கிய பணத்திலிருந்தே கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஒமல்பே தெரிவித்துள்ளார்.

ஆனால் மக்களிற்கு தற்போது ஆலயங்களிற்கு அன்பளிப்பு செய்வதற்கு பணம் இல்லை அரசாங்கம் அவர்களிற்கு வருவாய் வரும் வழிகளை அழித்துவிட்டது எனவும் ஒமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டணங்களை செலுத்தாதன் காரணமாக வறிய மக்களின் வீடுகளிற்கான மின்சாரத்தையும் இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள் மாத்திரமல்ல சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். மக்களை இந்த நியாயமற்ற செயலிற்கு எதிராக ஒன்றுதிரட்டவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன், குறிப்பிட்ட காலத்தில் மின் கட்டணங்களை செலுத்தாத இடங்களிற்கான மின் விநியோகம் துண்டிக்கப்படும். ஆலயங்கள் வீடுகள் எந்த இடமாகயிருந்தாலும் அவர்கள் எங்கள் வாடிக்கையாளர்களே எந்த வாடிக்கையாளருக்கும் நாங்கள் விசேட சலுகைகளை வழங்க முடியாது. மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment