சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்! - News View

About Us

About Us

Breaking

Monday, June 12, 2023

சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் 53 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவரும் மற்றொரு சந்தேக நபரை கைது செய்யவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591733, 071-8591735, அல்லது 071-8596503 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment