பாராளுமன்றத்தை ஜூலை 01ஆம் திகதி கூட்டுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (01) மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, குறித்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளைக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பாணையை விடுத்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முழு நாள் விவாதத்தை தொடர்ந்து அன்றையதினம் வாக்கெடுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
No comments:
Post a Comment