ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்டத் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.
ஜனாதிபதி இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மாவட்டத் தலைவர்களுடன் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆறு மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமானதாகவும் எனினும் ஒரு மணி நேரத்தின் பின்னர் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டியதில்லை என பொதுஜன பெரமுன தீர்மானித்தாக தகவல்கள் வெளியாகின்றன.
ஜனாதிபதி கட்சியின் மாவட்டத் தலைவர்களை அழைத்தமை குறித்து பொதுஜன பெரமுன வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் கட்சியின் மாவட்டத் தலைவர்களிற்கு அழைப்பு விடுப்பதை ஏற்க முடியாது என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment