ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
68 வயதான அவர், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதோடு, கடந்த 2007 - 2010 பகுதியில் இறுதியாக வெளி விவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.
ரோஹித போகொல்லாகம 2017 ஜூலை - 2018 டிசம்பர் காலப் பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment