இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகை மேலும் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 9, 2023

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகை மேலும் நீடிப்பு

இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தின் ஒரு பகுதியான இந்த தொகையை கடந்த மார்ச் மாதத்திற்குள் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பேச்சுவார்த்தையின் பின்னர் கடன் நிவாரணத்தை 2024 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடனுதவியானது பிரதானமாக அத்தியாவசிய மருந்து மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment