செவ்வாய் பேச்சுவார்த்தை, வியாழன் அறிவிப்பு - தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

செவ்வாய் பேச்சுவார்த்தை, வியாழன் அறிவிப்பு - தேர்தல் ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் அரச அச்சகத் திணைக்கள தலைவர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் செவ்வாய்க்கிமை (07) பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழழை உத்தியோகபூர்வமாக அறிவிக்க ஆணைக்குழு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான புதிய திகதியை அறிவிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (03) கூடியது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிதியை திறைசேரி விடுவிக்காமல் தடுத்து வைத்துள்ளதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவை கருத்திற் கொண்டு தேர்தல் வாக்கெடுப்பு புதிய திகதியை அறிவிக்கும் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போட்டது.

இதற்கமைய உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முன்னிலைப்படுத்தி திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே, பொலிஸ்மா அதிபர் சி.டி ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்ததையில் ஈடுபட ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இவர்களுடனான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இழுபறி நிலையில் உள்ள நிலையில் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 09 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி விடுவிப்பு பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment