கண்டி - மஹியங்கனை பிரதான வீதியை பயன்படுத்துவோருக்கு அவசர அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியை பயன்படுத்துவோருக்கு அவசர அறிவிப்பு

பலத்த மழையினால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து கண்டி - மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன

பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியான 18 வளைவு வீதியை நேற்று (04) முதல் தற்காலிகமாக பொலிஸார் மூடியிருந்தனர்.

மோசமான காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வீதியின் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், ரந்தெனிகல - பதுளை வீதியோ அல்லது ரஜ மாவத்தை, தென்னகும்புர மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகில் வந்து சந்தி 21இல் இடப்புறமாக வாகனத்தை செலுத்தி பதுளை - மஹியங்கனை வீதியினூடாக மஹியங்கனை நகரை அடையலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வீதியில் சரிந்து வீழ்ந்த பாறைகளை அகற்றும் பணி இன்று காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வந்து அப்பகுதியை ஆய்வு செய்து பின்னர் பாறைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணியை மேற்கொள்வார்கள் என மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment