மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 12, 2023

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமனம்

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

அதற்கமைய, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். 

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வழிமொழிந்தார்.

அதேபோன்று, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண நியமிக்கப்பட்டார். 

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச வழிமொழிந்தார்.

இதேவேளை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டார். 

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன அதனை வழிமொழிந்தார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தனித்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டார்.  

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டங்களில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்ற கூட்டங்களில் ‘தேசிய பாதுகாப்பு’ சரத் வீரசேகர, ‘மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு’ - உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, ‘சுற்றாடல், ‘இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி’ - அஜித் மான்னப்பெரும ஆகியோர் 3 துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் புதன் (08) மற்றும் வியாழக்கிழமை (09) ஆகிய தினங்களில் முதல் தடவையாகக் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்திருந்தார்.

இதற்கமைய இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் எட்டுக்குமான தலைவர்கள் முதலாவது கூட்டத்தில் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் ஆளும் கட்சியிலிருந்தும், நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் நியமிக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டிருந்தார்.

17 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்ததுடன், இதில் 7 குழுக்களே கடந்த புதன், வியாழக்கிழமை கூடி அதற்கான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12) கூடுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)

பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 11)

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 09)

வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வை குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 11)

No comments:

Post a Comment