மாணவி பாலியல் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 5, 2023

மாணவி பாலியல் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது!

பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சந்தேகநபரான 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட குறித்த மாணவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment