அக்கிராசன உரை நிகழ்த்துவதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 9, 2023

அக்கிராசன உரை நிகழ்த்துவதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது - எதிர்க்கட்சித் தலைவர்

ஜனாதிபதி தனது கனவுகளை நனவாக்கி அக்கிராசன உரை நிகழ்த்தும்போது கிராமங்களில் உள்ள மக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான பூச்சிக்கொல்லிகளில் இருந்து பாடசாலை மாணவர்கள் கற்கத் தேவையான பொருட்கள் வரை எதுவும் அவர்களிடம் இல்லை. மக்கள் இவ்வாறு மிகவும் நிர்க்கதிக்காளாகிவிட்ட வேளையில் உலகுக்கு கடனாளியாக இருந்துகொண்டு, சுதந்திர தினத்தன்று நடமாடும் கழிவறைகளுக்காக 142 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மஹியங்கனையில் நேற்று (8) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அக்கிராசன உரை நிகழ்த்துவதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. யானை - மொட்டு அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும்போதே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

மக்கள் படும் துன்பங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை. சாதாரண மனிதனதும் துன்பத்தை புரிந்துகொள்ளும், மனித நேயம் மேலோங்கும் ஆட்சியொன்றின் யுகம்தான் இப்போது நாட்டுக்குத் தேவை.

ஒருபுறம் கேஸ் விலை உயரும்போது, மறுபுறம் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. மக்களுக்கு பாதகங்களை விளைவிக்கும் இந்த சீரற்ற அரசை ஒழிக்க ஒன்றிணைவோம்.

தற்போது நாட்டுக்கு ஏற்றுமதியை மையமாகக் கொண்ட, உற்பத்தியை மையமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதாரமொன்றே தேவை.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாரிய விவசாயப் புரட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் யானையின் போர்வையில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது.

இனிமேல் பதவியேற்கும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அரசியலை விடுத்து தேச சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நாட்டுக்கு நல்லது என்றார்.

No comments:

Post a Comment