நாட்காட்டிகள் மற்றும் நாட் குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார்.
நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட் குறிப்புகள் அச்சிடுவது கனவாகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காகிதத்தின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது.
அதிகாரிகள் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment