தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்களை இல்லாமல் செய்த ஆண்டு 2022 என காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி எங்கள் வீட்டில் பால்சோறு இல்லாத 13 வருடங்கள்.
இந்த 13 வருடங்களில் 2022ஆம் ஆண்டே மிகச்சிறந்த வருடம் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்தவர்களை தங்களை மன்னர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களை துவம்சம் செய்த வருடம் இது.
இதன் காரணமாகவே நான் 2023ஆம் ஆண்டு 2022 போன்று காணப்பட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
No comments:
Post a Comment