அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் - வெளியானது சுற்றறிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் - வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாண்டு 4,000 ரூபாவுக்கு மேற்படாத விசேட முற்பணத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சுற்று நிரூபம் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேவினால்  வெள்ளிக்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த சுற்று நிரூபம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்முற்பணக் கொடுப்பனவை 01.01.2023 அன்று தொடங்கி 28.02.2023 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்றும், பெப்ரவரி 28 ஆம் திகதியின் பின்னர் இதனை செலுத்த முடியாது என்றும் குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இதனை இவ்வாண்டுக்குள் அறிவிட்டு நிறைவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment