களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சித்திரவதை செய்தமை தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அவரை ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 3.00 மணியளவில் விரிவுரைகள் முடிந்து விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழகம் சென்று கொண்டிருந்தபோதே தான் சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அந்த மாணவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன்போது தான் எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக 7 மாணவர்கள் கொண்ட சிரேஷ்ட மாணவர்கள் குழு தன்னை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மணவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment