சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக ஒரு வகையான காய்ச்சல் பரவுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலும், இன்ஃப்ளூவன்ஸா பாதிப்பும் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த டாக்டர் தீபால் பெரேரா, சிறுவர்களை"இன்றைய நாட்களில், குழந்தைகளுக்கு பல விதமான காய்ச்சல் பரவுகிறது.
குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் டெங்கு நோயாளர்களும் நமது சுற்றுச்சூழலில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா நோய்க்கான அறிகுறிகளாக, காய்ச்சலுடன் இருமல், சளி சிலருக்கு வாந்தியும் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற வைரஸ்களால் ஏற்படலாம்.
எனவே இந்த அறிகுறியுள்ளவர்கள் முடிந்தால், வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறான குழந்தைகளை ஓய்வாக வைத்திருப்பதுடன், அவர்களுக்கு திரவ உணவு வழங்குவதே சிறந்தது. வௌியே செல்ல நேரிடின், முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆரம்பப் பாடசாலை, டே கெயார் சென்டர்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை வீடுகளில் வைத்திருப்பது நல்லது.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பது டெங்குக்கான அறிகுறியென்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், முழு இரத்த பரிசோதனையை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment