ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கப் போகும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு : பொலிஸாருக்கும் கடும் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கப் போகும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு : பொலிஸாருக்கும் கடும் எச்சரிக்கை

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்றைய ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை பெறுமாறு பொலிஸார் தங்களிற்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்துள்ளனர் என தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்தமைக்கு பதில் அளிக்கையில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77 பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களிற்கு அனுமதியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசமைப்பே நாட்டின் அதி உச்ச சட்டம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறுவதால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 28 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட பரிந்துரைகளை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வெகுசன அமைப்புகளும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment