உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ரிஷாட் பதியுதீன் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 2, 2022

உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ரிஷாட் பதியுதீன் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (02) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே குறித்த உத்தரவை வழங்கினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021, ஏப்ரல் 24ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை CIDயினால் கைது செய்தப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வருடம் ஒக்டோபர் 14ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment