குவைத் வாழ் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் சமூகங்கள் ஒன்றினைந்து "கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி" ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வானது குவைத்தின் "ஸுலைப்பிக்காத்" கடற்கரை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை கேரளாவின் சமூக சேவை அமைப்பான KIG- (Kerala Islamic Group Kuwait) முன்னின்று செயற்படுத்தியது.
குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC-Kuwait) இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.
ஜம்மியத்துல் இஸ்லாஹ் நிறுவனத்தின் "மக்தப் அத்' தஆவுன் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IPC) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்நிகழ்ச்ச்சிக்கு பூரண அனுசரணை வழங்கி ஒத்துழைத்தன.
இந்நிகழ்ச்ச்சிக்கான வழிகாட்டல்களை "Kuwait Diving Team" வழங்கி உதவியது.
நேற்றைய இந்த கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் குவைத் நாட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது நாம் இந்நாட்டுக்கு செய்யும் நன்றிக் கடன்களில் ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சிக்கு சகல விதத்திலும் உதவி செய்த KIG- (Kerala Islamic Group Kuwait), ஜம்மியத்துல் இஸ்லாஹ், மக்தப் அத்'தஆவுன், இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் Kuwait Diving Team ஆகிய நிறுவனங்களுக்கும் அதேபோல் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த AIWA, EFCOM, AL HUDA ஆகிய சமூக சேவை அமைப்புக்களுக்கும் IIC-Kuwait தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment