பாதுகாப்பு அமைச்சு, மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது.
நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று மேற்படி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்டு முழு நாள் விவாதமாக முன்னெடுக்கப்பட்டது.
விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.
விவாதத்தின் இறுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பு கோரினார். அதனையடுத்து சபையில் வாக்களிப்பு இடம்பெற்றதுடன் 81 மேலதிக வாக்குகளால் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
அதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்த துமிந்த திஸாநாயக்க மற்றும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
அதன்படி 81 மேலதிக வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment