இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் முரண்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்படும் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் முரண்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்படும் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றும் அவரது செயற்பாடுகள் முரண்பட்டவையாகக் காணப்படுகின்றமையால், அது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமையால் அதனை தம்மால் செலுத்த முடியாது என்று மதத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பியபோது மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அவரது செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment