உக்ரேனில் ஆக்கிரமித்த இடங்கள் ரஷ்யாவோடு இணைப்பு : விளாதிமிர் புட்டின் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

உக்ரேனில் ஆக்கிரமித்த இடங்கள் ரஷ்யாவோடு இணைப்பு : விளாதிமிர் புட்டின்

உக்ரேனில் ஆக்கிரமித்த இடங்களை ரஷ்யாவோடு இணைக்கும் நிகழ்வு ரஷ்யாவில் நடந்து வருகிறது.

உக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என கூறப்படும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்பு இது வருகிறது.

இந்த வாக்கெடுப்பை கேலிக்கூத்து என்று உக்ரேனும், சட்டவிரோதமானது என்று மேற்குலக நாடுகளும், சட்ட வல்லுநர்களும் நிராகரித்துள்ளனர.

இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின்போது ரஷ்ய அதிபர் விளாடிதிர் புட்டி ன், அந்தந்த பகுதி மக்களே, ரஷ்யாவோடு தங்களை இணைத்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்த நிலத்தை பெற்றுக் கொள்ள பல தலைமுறைகளாக ரஷ்யர்கள் போராடியிருப்பதாக புட்டின் குறிப்பிட்டார்.

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட வீரமிக்க சிப்பாய்களை நினைவுகூரும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த அனைவரையும் புட்டின் கேட்டுக் கொண்டார். நமது நிலத்திற்காக போராடி அவர்கள் இறந்ததாக அவர் தெரிவித்தார்.

டோன்பாஸ் பிராந்தியத்திலுள்ளவர்கள் ரஷ்யாவின் குடிமக்களாக என்றென்றும் இருப்பர் என்று உக்ரேன் மற்றும் மேற்குலக நாடுகளில் உள்ள அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவதாக அதிபர் புட்டின் பேசினார்.

மக்களின் இந்த தெரிவை உக்ரேனிய அதிகாரிகள் மிகுந்த மரியாதையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கும் வகையில் இயன்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி நிலத்தை ரஷ்யா பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டையும் ரஷ்யா மீண்டும் கட்டியெழுப்பும் என்று அவர் தெரிவித்தார்.

உக்ரேனின் இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவோடு இப்போது இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளை மீட்க உக்ரேன் மேற்கொள்ளும் முயற்சிகள், ரஷ்ய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி தாக்குதலாக கருதப்படும். இதனால், யுக்ரேன் மீதான போர் மேலும் சிக்கலாக மாறும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment