மல்வானை காணி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் ஆகியோர் நிரபராதிகள் என விடுதலை - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

மல்வானை காணி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் ஆகியோர் நிரபராதிகள் என விடுதலை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் மள்வாளை காணி வழக்கிலிருந்தும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்றையதினம் (03) கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மள்வானை பிரதேசத்தில் உள்ள 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து அங்கு நீச்சல் தடாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பாரிய சொகுசு வீடொன்றை நிர்மாணித்து அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டாளரால் அழைக்கப்பட்ட முதலாவது சாட்சியாளர் நிதிக் குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்யவில்லையெனவும், வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள கையொப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, சாட்சியமளித்துள்ளதன் காரணமாக, வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லையென, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment