CID யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அட்டுலுகம சிறுமியின் மரண விசாரணை : நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 29, 2022

CID யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அட்டுலுகம சிறுமியின் மரண விசாரணை : நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட, 09 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் (27) முற்பகல் 10.00 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு அவரது தாய் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பியிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து 9 வயதான அச்சிறுமி அப்பகுதியில் உள்ள சேற்று நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் அப்பிரதேசத்தை மாத்திரமன்றி, முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்க தான் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment