முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது நேற்று (09) திங்கட்கிழமை மாலை கல்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர் வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது சம்பவதினமான நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலினால் வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்து சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கனகராசா சரவணன்
No comments:
Post a Comment