முன்னாள் அமைச்சர்களான பசில், விமலின் வீடுகள் தீக்கிரை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 10, 2022

முன்னாள் அமைச்சர்களான பசில், விமலின் வீடுகள் தீக்கிரை

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானையில் உள்ள வீடு இன்று சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் நேற்று கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானையில் உள்ள வீடும் தற்போது தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டள்ளது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீடும் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment