பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் - பிரதமர் மஹிந்த

பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிரிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்டக் களத்திலும், அலரி மாளிகை முன்பான போராட்டக் களத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment