இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்க செலவுகளை 250 பில்லியன் ரூபாவினால் குறைக்க தீர்மானம் : நிதியமைச்சர் திறைசேரி வழிமுறைகள் குறித்து பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Monday, May 30, 2022

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்க செலவுகளை 250 பில்லியன் ரூபாவினால் குறைக்க தீர்மானம் : நிதியமைச்சர் திறைசேரி வழிமுறைகள் குறித்து பரிந்துரை

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதில் குறிப்பாக அரசாங்கத்தின் மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவு குறைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.

வரி வருமானங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment