மிரிஹான ஆர்ப்பாட்டத்தின்போது பஸ்ஸூக்கு தீ வைத்த நபரை தேடும் பொலிஸ் : பொதுமக்களின் உதவியையும் நாடுகிறது - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

மிரிஹான ஆர்ப்பாட்டத்தின்போது பஸ்ஸூக்கு தீ வைத்த நபரை தேடும் பொலிஸ் : பொதுமக்களின் உதவியையும் நாடுகிறது

மிரிஹான பகுதியில் அண்மையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவங்களின் போது பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை கோருவதாக குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் அது தொடர்பில் தகவலறிந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அந்தத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

சந்தேகநபர்கள் 31 பேர் நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment