வறுமையின் பிடியிலும் மனிதாபிமானமில்லாது வரி கோருகிறது கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களம் : ஆளுநரை தலையிட்டு தீர்வை பெற்றுத்தர கோருகின்றனர் மக்கள் ! - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

வறுமையின் பிடியிலும் மனிதாபிமானமில்லாது வரி கோருகிறது கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களம் : ஆளுநரை தலையிட்டு தீர்வை பெற்றுத்தர கோருகின்றனர் மக்கள் !

நூருல் ஹுதா உமர்

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாது இறைவரி திணைக்கள கிழக்கு மாகாண காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் நடமாடும் சேவைகள் மூலமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை தினம் சந்தித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் நிரந்தர மின்சாரமின்மை, எரிபொருள் பிரச்சினைகள், அன்றாட வாழ்வியலில் பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்கள் காரணமாக நிறைய பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றாக இழந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வுகள், பொருட்கள் இல்லாத திண்டாட்டம் காரணமாக தொழிலில்லா நிலைகள் உள்ள இந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாண இறைவரி திணைக்களத்தினால் வரி அரவிடுதல் எனும் போர்வையில் மனசாட்சிக்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், நாட்டின் பொருளாதரம் முற்றாக வீழ்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இறைவரி அரவிடல்களை செய்து உள்ளுராட்சி மன்றங்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் இறைவரி திணைக்கள அதிகாரிகள் ஏழை எளிய மக்களின் பசியையும் வாழ்வாதார நிலைகளையும் கவனத்தில் கொள்ளாது செயற்படுகிறார்கள். 

மக்களின் நிலைகள் தொடர்பில் எவ்வித கரிசனையும் இன்றி கல்முனை மாநகர சபையினரும் தங்களின் வருமானத்தை கவனத்தில் கொண்டு இவ்வேலைத்திட்டத்தை செய்ய பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

நாட்டின் நிலையறிந்து, மக்களின் வாழ்வியல் கஷ்டங்களை அறிந்தும் இந்த வரி அறவிடும் வேலைத் திட்டத்தை நாடு சீராகும்வரை பிற்போட நடவடிக்கை எடுக்க கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், இறைவரி திணைக்கள ஆணையாளர் உட்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

No comments:

Post a Comment