நாளையதினம் (04) மின் வெட்டு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

நாளையதினம் (04) மின் வெட்டு அறிவிப்பு

நாளையதினம் (04) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC1) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் 4 மற்றும் 5 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (04) மின் வெட்டு அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 4 - 5 மணித்தியாலங்கள்.

ABCDEFGHIJKL | PQRSTUVW : 5 மணித்தியாலங்கள்
மு.ப. 10.00 - பி.ப. 5.00 வரை 3½ மணித்தியாலங்கள்
பி.ப. 6.00 - இரவு 9.00 வரை 1½ மணித்தியாலங்கள்

CC1 
மு.ப. 6.00 - பி.ப. 10.00 மணி வரை 4 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நாளையதினம் (04) 7 மணித்தியால மின்வெட்டுக்கு இ.மி.ச. கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிராகரித்த ஆணைக்குழு, அதனை 5 மணித்தியாலங்களுக்குள் குறைக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

No comments:

Post a Comment