நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம் தற்போது மக்களால் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்வதால் அங்கு பதற்ற நிலை தொடர்கின்றது
சிறு குழுவாக ஆரம்பமான குறித்த போராட்டத்தில், ஏராளமானோர் குவிந்த நிலையில், கலகம் அடக்கும் குழுவினர் வயவழைக்கப்பட்டு, பொலிஸார், இராணுவத்தின் உதவியுடன் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் பாதுகாப்பு படையினர் வந்த பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினரால் இறப்பர் தோட்டா சூடும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்ட போதிலும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின்வாங்காமல் ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள வீதியில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணமுள்ளனர்.
அவர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment