"புட்டினுடன் பேசுவது மட்டுமே போரை நிறுத்தும்" - உக்ரைன் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

"புட்டினுடன் பேசுவது மட்டுமே போரை நிறுத்தும்" - உக்ரைன் ஜனாதிபதி

போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புட்டினுடன் நேரடியாக பேசுவது மட்டுமே என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஸெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 9 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அது ஒன்றே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. 30 மீட்டர் இடைவேளியில் அல்ல. நான் கடித்துவிட மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாங்கள் ரஷ்யாவை தாக்கவில்லை. எங்களுக்கு ரஷ்யாவை தாக்கும் திட்டமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களின் நிலத்தை விட்டுவிடுங்கள்.” என்றார்.

No comments:

Post a Comment