நாளையும் இரு கட்டங்களில் 7 ½ மணி நேர மின் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

நாளையும் இரு கட்டங்களில் 7 ½ மணி நேர மின் வெட்டு

நாளையதினம் (04) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (03) போல் நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மொத்தமாக 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய
மு.ப. 8.00 - பி.ப. 1.00 மணி வரை
பி.ப. 1.00 - பி.ப. 6.00 மணி வரை

முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்

பி.ப. 6.00 - பி.ப. 8.30 மணி வரை
பி.ப. 8.30 - பி.ப. 11.00 மணி வரை

இரண்டாம் கட்டத்தில் 2½ மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment