பழைய முறையில் விரைவில் மாகாண சபைத் தேர்தல் : பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Friday, February 25, 2022

பழைய முறையில் விரைவில் மாகாண சபைத் தேர்தல் : பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பரிந்துரை

புதிய தேர்தல் முறை உருவாக்கப்படும் வரை பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விஷேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் இவ்வாறு பரிந்துரைகளை முன்வைக்க அந்த தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், குழுவின் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

சகல தேர்தல்களின்போதும் தொகுதிவாரியில் 60 வீதம், விகிதாசார முறையில் 40 வீதம் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் கலப்பு தேர்தல் முறையிலான அறிக்கையை முறைப்படுத்துவதற்கு விஷேட தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை நிலைப்பாடுகளை உருவாக்குவதற்காக வெற்றி பெற்ற கட்சி அல்லது குழுவுக்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொடுக்கவும் பரிந்துரை முன்வைக்க கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment