கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி பணிகள் நாளை ஆரம்பம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி பணிகள் நாளை ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுசரணையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நாளை கா‍லை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முனையம் 1,320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும், முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் அபிவிருத்தி செய்யப்படும்.

2024 ஜூலை 4 ஆம் திகதிக்குள் குறித்த திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment