ஐக்கிய ராட்சியத்திற்கான இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன் (Sarah Hulton OBE) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் செய்த அவர் இலங்கையின் சமகால நிலைமைகள் தெடர்பாக விரிவாக கலந்துரையாடினர். இச்சந்திப்பிற்கு வருகை தந்தமைக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் ஹாபிஸ் நசீர்.
இலங்கை உற்பட உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோணா பாதிப்பினால் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனால் மக்கள் எதிர்நோக்கும் சமூக,பொருளாதார தாக்கங்களை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய தூதுவரிடம் தெளிவு படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற காணி அபகரிப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மாற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியோதோடு அது தொடர்பிலான ஆவணங்களும் பிரித்தானிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments:
Post a Comment