இந்தியாவின் துர்கா பூஜையை உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில் இணைத்தது யுனெஸ்கோ - News View

About Us

About Us

Breaking

Friday, December 17, 2021

இந்தியாவின் துர்கா பூஜையை உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில் இணைத்தது யுனெஸ்கோ

இந்தியாவின் பாரம்பரிய துர்கா பூஜை, இந்த ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.

1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் யுனெஸ்கோ, கொல்கத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜா நிகழ்ச்சியை, கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இணைத்துள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், நம் பெருமைமிகுச் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், தேசிய ஒற்றுமையையும், துர்காபூஜை வெளிப்படுத்துகிறது. உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில், கொல்கத்தா துர்கா பூஜையை யுனெஸ்கோ சேர்த்துள்ளது, 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையாகும் என்றார்.

No comments:

Post a Comment