காணித் தகராறில் தாய் மாமனைக் கொலை செய்த மருமகன் : இருவர் கைது - ஓட்டமாவடியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 21, 2021

காணித் தகராறில் தாய் மாமனைக் கொலை செய்த மருமகன் : இருவர் கைது - ஓட்டமாவடியில் சம்பவம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (21.12.2021) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாயக் கண்டத்திலுள்ள வயற் காணி தொடர்பாக சகோதரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்குமிடையில் தகராறு இருந்து வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்குமிடையில் ஏற்பட்ட தகராரே இந்த கொலைக்கான காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்தவரின் தாயாரான சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் தெரிவிக்கையில், நானும் எனது கொலை செய்யப்பட்ட மகனும் வயலுக்கு உரம் எறிவதற்கு வந்த போது, வயலுக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்ருந்தார்.

அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது, அவருக்கு அடித்து வெட்டி விட்டு, என்னிடம் “உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ” என்று சொல்லி விட்டு எனது பேரன் போனான் என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் முள்ளிவட்டவான் விவசாய அமைப்புத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா கருத்துத் தெரிவிக்கையில், நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கர வண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் “எனது மாமாவை வெட்டி விட்டேன். அவரை உங்கள் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது “அவர் மரணித்து விட்டார். நீங்கள் அம்புளன்ஸ்சுக்கு அறிவியுங்கள்” என பௌசான் சொல்லி விட்டுச் சென்றார் எனத் தெரிவித்தார்.

சம்பவத்தில் மீராவோடை, மாஜ்சோலை பள்ளிவாயில் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலியார் ஹமீட் (வயது 38) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.

No comments:

Post a Comment